Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து

ஏப்ரல் 19, 2020 02:17

சென்னை: உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற பணிகளும் மே வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வருகி்ன்றன.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக் கப்பட்டுள்ள முடிவுகளின்படி வரும் மே 1 முதல் 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கீழமை உரிமையியல் நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள் ளது. இதேபோல உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கான மே மாத கோடை விடுமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி கீழமை உரிமையியல் நீதிமன்றங்கள் வழக்கம்போல செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்